செம்மரக்கடத்தல் தொடர்பாக பிரபல தெலுங்கு சின்னத்திரை நடிகர் கைது

திருப்பதி அருகேயுள்ள மங்களம் பகுதியை சேர்ந்தவர் ஹரி.  இவர் பிரபல தெலுங்கு தனியார் தொலைக்காட்சியில், தொடர்கள், நிகழ்ச்சிகள் மற்றும், தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், ஆந்திராவில் இருந்து வெளிநாடுகளுக்கு செம்மரக்கடத்தலில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்கில், இவருக்கும் தொடர்புள்ளதாக செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, தலைமறைவான ஹரியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதனிடையே,திருப்பதி நீதிமன்றத்தில் சரணடைய வந்த அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Exit mobile version