கல்வி மற்றும் பொருளாதாரத்தில் தமிழகம் தன்னிறைவு மாநிலம் – அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி

சென்னை கலைவானர் அரங்கில் பழங்குடி மக்களின் கலாச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அவர், தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில், 1 புள்ளி10 சதவீதம் பேர் பழங்குடி மக்கள் எனத் தெரிவித்தார்.

தமிழகத்தில் 36 வகையான பழங்குடி மக்கள் வசிப்பதாகவும், அவர்களின் பொருளாதார மேம்பாடு, கல்விக்கான சீர்மிகு செயல்களை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக அமைச்சர் ராஜலட்சுமி கூறினார்.

போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும், பழங்குடியினரின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version