உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு நடைப்பயணம் – சுற்றுலாத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மதுரையில் நடைபெற்ற நடைப்பயணத்தில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

உலக சுற்றுலா தினம் மதுரையில் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக நடைபெற்ற பாரம்பரிய நடைப் பயணத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மீனாட்சி,சுந்தரேஸ்வரர் கோயிலில் தொடங்கிய நடைப் பயணம் திருமலை நாயக்கர் மஹால் வரை நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர்.

Exit mobile version