இந்து கோயில்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் -எச்.ராஜா

இந்து கோயில்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்து ஆலயங்கள் மீட்பு இயக்கம் சார்பாக நடக்கும் உண்ணாவிரதத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். கோயில் சொத்துக்களை பராமரிப்பது தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றம் விதித்த உத்தரவை உடனே நடைமுறை படுத்த வேண்டுமென்று எச்.ராஜா வலியுறுத்தி உள்ளார். அதனை நடைமுறைப்படுத்தாவிட்டால், 10 லட்சம் கோயில்களை இழக்க வேண்டி வரும் என்று அவர் எச்சரித்தார். இதுதொடர்பாக இந்து சமய அறநிலைய துறை அலுவலகங்கள் முன்பு தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் எச்.ராஜா தெரிவித்தார்.

 

Exit mobile version