மாங்கனி திருவிழா வரை ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரி வழக்கு: மாவட்ட நிர்வாகம் பதிலளிக்க உத்தரவு

காரைக்காலில் மாங்கனித் திருவிழா முடியும் வரை ஆக்கிரமிப்பு அகற்றத்தை நிறுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மாவட்ட நிர்வாகம் பதிலளிக்கக் கோரி காரைக்கால் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காரைக்கால் நகரில் அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கடைகள் மற்றும் வீடுகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதையடுத்து காரைக்கால் நகராட்சி ஊழியர்கள் பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கடைகள் மற்றும் வீடுகளின் பகுதிகளை அகற்றினர்.

அப்போது நகராட்சி அதிகாரிகளுடன் கடை உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் காரைக்காலில் நடைபெறும் புகழ்பெற்ற மாங்கனித் திருவிழா முடியும் வரை ஆக்கிரமிப்பு அகற்றத்தை நிறுத்தி வைக்கக்கோரி காரைக்கால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இது தொடர்பாக பதிலளிக்க கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version