திமுக ஆட்சியில் தான் 600-க்கும் மேற்பட்ட ஏரிகள் மூடப்பட்டன: எச்.ராஜா

சென்னையில் 600-க்கும் மேற்பட்ட ஏரிகளை மூடியது, திமுக ஆட்சி காலத்தில் தான் என்றும், சென்னை நகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட திமுகவே காரணம் எனவும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் பாஜக உறுப்பினர்கள் சேர்க்கும் கூட்டத்திற்கு வருகை தந்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த தேவையான உதவிகளை மத்திய அரசு தமிழக அரசுக்கு செய்து கொடுக்கும் என்றார்.

Exit mobile version