இடைத்தேர்தல் அறிவித்த பிறகு தேமுதிகவின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்

 

இடைத்தேர்தல் அறிவித்த பிறகு கட்சியின் நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பொருளாளர் பதவியை தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனக்கு அளித்துள்ளதாகக் கூறினார். மேலும் தன்னை வாழ்த்திய கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்த அவர், குடும்ப உறுப்பினர்கள் கட்சிக்குள் வருவதை தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அனைத்து மதங்களின் நம்பிக்கைளை மதிக்க வேண்டும் என்றும், மதத்தின் பெயரால் சிலர் மக்களை பிளவு படுத்தப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

Exit mobile version