அரசுப் பள்ளிகள் மேம்பாட்டிற்காக ரூ.28 ஆயிரம் கோடி ஒதுக்கீடு – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

விஜயதசமி தினத்தன்று தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் சேர்க்கை நடைபெற்றுள்ளதாகவும், சேர்க்கை விபரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என்று, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், தமிழகம் முழுவதும் நீர் நிலைகள் நிரம்பி அனைத்துத் தரப்பு மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

அனைத்துத் துறைகளும் போட்டிப் போட்டுக் கொண்டு, பல்வேறு பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார். இந்திய அளவில் சிறப்பான திட்டங்களை நிறைவேற்றும் மாநிலமாகத் தமிழகம் இருப்பதாகப் பெருமிதம் தெரிவித்தார். தமிழகத்தில் ஏழை எளிய மற்றும் கிராமப் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருவதாகவும், அரசுப் பள்ளிகள் மேம்பாட்டிற்காக சுமார் 28 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

 

Exit mobile version