அதிமுக அரசின் நடவடிக்கைக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு – தமிழ் வளர்ச்சிதுறை அமைச்சர் பாண்டியராஜன்

மீட்கப்பட்ட சிலைகளை வைக்க இடம் கேட்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் அரசின் உதவியை நாடவில்லை என்று தமிழ் வளர்ச்சிதுறை அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக அரசின் நடவடிக்கைக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

இதை தாங்க முடியாத திமுக தலைவர் ஸ்டாலின் உண்மைக்கு முரணான விமர்சனங்களை பதிவு செய்து வருவதாக அமைச்சர் பாண்டியராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

மீட்கப்பட்ட சிலைகளை வைக்க இடம் கேட்டு பொன் மாணிக்கவேல், அரசின் உதவியை நாடவில்லை என்று அவர் கூறினார். எழும்பூர் அருங்காட்சியகத்தில் சிலைகளை வைக்க எந்த தடையும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

Exit mobile version