News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

விவசாயிகளுக்கு பலன் தரும் ஜீரோ பட்ஜெட் விவசாயம்

Web Team by Web Team
July 30, 2019
in TopNews, இந்தியா, கட்டுரைகள், செய்திகள்
Reading Time: 1 min read
0
விவசாயிகளுக்கு பலன் தரும் ஜீரோ பட்ஜெட் விவசாயம்
Share on FacebookShare on Twitter

காடுகளில் வளரும் செடிகளுக்கும் மரங்களுக்கும் யாரும் தோட்ட வேலைகளைச் செய்வதில்லை. அவற்றுக்கு உரமோ, பூச்சிக் கொல்லியோ தேவைப்படுவதில்லை.

அதுபோலவே விவசாயிகள் தங்கள் பயிர்களை விளைவித்தால் அவர்களின் இடுபொருள் செலவு பூஜ்ஜியம் ஆகும். இதுவே ‘ஜீரோ பட்ஜெட் விவசாயம்’ என்று அழைக்கப்படுகிறது.

ஜீரோ பட்ஜெட் விவசாயம் விவசாயிகளுக்கு ஒரு நல்ல மாற்றாக பார்க்கப்படுகிறது. ஆனால் இது எளிமையானது அல்ல.

ஜீரோ பட்ஜெட் விவசாயம் – விவசாயிகளின் பணத்தைக் கேட்பது இல்லை என்றாலும் அவர்களின் உழைப்பையும் கவனிப்பையும் கேட்கக் கூடியது. பயிர்களின் விளைச்சலை மேம்படுத்த, மண்ணில் நுண்ணுயிர்களை அதிகரிப்பதும் மண்ணை நொதிக்க வைப்பதும் தேவைப்படுகின்றன.

இதனை சாணம், கோமியம் இவற்றாலான ஜீவாம்ருதத்தைக் கொண்டு விவசாயிகள் செய்யலாம். இம்முறையில் 30 ஏக்கர் நிலத்தை வளப்படுத்த ஒரு மாடும் கொஞ்சம் உழைப்பும் மட்டும் போதும். மண் வளத்தை அதிகரிக்கவும், பூச்சிகளை கட்டுப்படுத்தவும் இப்படிப் பல இயற்கை சார்ந்த வழிமுறைகள் உள்ளன. இவற்றை நோக்கி விவசாயிகள் நகரத் தேவை ஏற்படும்.

இந்த ஜீரோ பட்ஜெட் விவசாயம் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழிகாட்டுமா? – என்றால் அதன் பதில் சிக்கலானது. ஏனென்றால் 1960கள் வரை இந்திய மக்கள் ஜீரோ பட்ஜெட் விவசாயம்தான் செய்து வந்தார்கள். இதனால் இந்தியா குறைவான உற்பத்தியையும் அடிக்கடி பஞ்சங்களையும் கண்டது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் மட்டும் இந்தியாவில் 24 பெரிய பஞ்சங்கள் ஏற்பட்டன. மக்கள் கோடிக் கணக்கில் இறந்தனர். 1930 வரையில் இந்திய மக்களில் மூன்றில் ஒருவருக்கு சத்தான உணவு இல்லை. 1960 வரையில் அரிசி என்பது இந்தியாவில் பணக்காரர்களுக்கு மட்டுமே உரிய உணவாக இருந்தது.

பசுமைப் புரட்சிக்குப் பின்னர்தான் இந்தியாவில் பஞ்சங்கள் மறைந்தன. சத்தான உணவு அனைவரும் எட்டும் நிலைக்கு வந்தது. அரிசி சோறு அனைவருக்கும் சாத்தியமானது. எனவே மீண்டும் மொத்த நாடும் ஜீரோ பட்ஜெட் விவசாயத்திற்கு மாறுவது அவ்வளவு எளிதானது அல்ல.

ஆனால் இன்னொரு பக்கம், நவீன வேளாண்மையில் வரும் உணவில் நஞ்சுக் கலப்பும், பூச்சிக் கொல்லிகளால் ஏற்படும் சூழல் மாசுபாடும் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. நஞ்சற்ற உணவு – என்பதும் மக்களின் முக்கியத் தேவையாகி உள்ளது. அதனால்தான் மரபு வழி விவசாயத்தை நோக்கி மக்கள் வருகிறார்கள். ஆர்கானிக் பொருட்களை 2 மடங்கு விலைக்கு வாங்க மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

இதனால் நிதி ஆயோக் தற்போது ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை ஊக்குவிக்கிறது. ஆந்திர மாநிலம் ‘2024ல் 100சதவிகித ஜீரோ பட்ஜெட் விவசாயம்’ என்ற இலக்கை நோக்கி பயணிக்கத் தொடங்கி உள்ளது. இவற்றின் விளைவுகளைப் பொருத்தே மற்ற மாநிலங்களால் முடிவுகளை எடுக்க முடியும்.

இந்திய அரசு மக்களின் தேவையையும், விவசாயிகளின் நலனையும் ஒரே சமயத்தில் கருத்தில் கொள்ள வேண்டிய நிலையில் இப்போது உள்ளது. இதனால்தான் மத்திய நிதியமைச்சரின் உரையும் உற்று நோக்கப்படுகிறது. ஆரோக்கியமான ஆர்கானிக் உணவுகள் அனைவருக்குமானதாக மாறுமா ? – என்பதை காலம்தான் சொல்லும்.

Tags: agriculturemerits & demeritsnirmala sitharamanZero Budget
Previous Post

மாற்றுத்திறனாளி என்ற பெயரை உடைத்து, தங்கம் வென்ற ஜெர்லின் அனிக்கா

Next Post

அதிவேக ரோந்து படகு கண்காணிப்பு பணி மீண்டும் தொடக்கம்

Related Posts

பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்
Top10

பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்

January 31, 2022
பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவரப்படுமா?
TopNews

பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவரப்படுமா?

September 17, 2021
இன்று முதல் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம்
Top10

இன்று முதல் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம்

April 1, 2021
சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி குறைப்பு வாபஸ்!
Top10

சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி குறைப்பு வாபஸ்!

April 1, 2021
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று தொடங்குகிறது!
Top10

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று தொடங்குகிறது!

March 8, 2021
விவசாயப் பங்காளன் எடப்பாடி பழனிசாமி!
Top10

விவசாயப் பங்காளன் எடப்பாடி பழனிசாமி!

February 5, 2021
Next Post
அதிவேக ரோந்து படகு கண்காணிப்பு பணி மீண்டும் தொடக்கம்

அதிவேக ரோந்து படகு கண்காணிப்பு பணி மீண்டும் தொடக்கம்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version