இந்திய அணியில் 4வது வரிசை ஆட்டக்காரர்களின் சொதப்பலே உலகக்கோப்பை தோல்விக்கு காரணம்

இந்திய அணியில் 4வது வரிசை ஆட்டக்காரர்கள் சரியாக தேர்ந்தெடுக்கப்படாததே உலகக் கோப்பை தோல்விக்கு காரணம், என்று முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை தோல்வி குறித்து நீண்ட நாட்களாக கருத்து தெரிவிக்காமல் இருந்த யுவராஜ் சிங், நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில், 5வது வீரராக தோனி களமிறங்கியிருக்க வேண்டும் என்று கூறினார். விஜய் சங்கர், ரிஷப் பண்ட் ஆகியோர் போதிய அனுபவமில்லாததால் 4வது வரிசை ஆட்டக்காரர்களாக அவர்களால் ஜொலிக்க முடியவில்லை என்றும் யுவராஜ் சிங் தெரிவித்தார். உலகக் கோப்பை முடிந்தும் இந்திய அணியில் 4வது வரிசை ஆட்டக்காரர் யார் என்பது இன்னும் கேள்விக்குறியாக உள்ளதாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Exit mobile version