எருது விடும் விழாவுக்கு அனுமதி மறுப்பு போராட்டத்தில் குதித்த இளைஞர்கள்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த கோப்பசந்திரம் பகுதியில் எருது விடும் விழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. போட்டியில் கலந்துகொள்ள ஏராளமான இளைஞர்களும், நூற்றுக்கணக்கான காளைகளும் அழைத்துவரப்பட்டன. இந்நிலையில் போட்டி நடத்த முறையான அனுமதி பெறவில்லை என கூறி காவல்துறையினர் எருது விடும் விழாவை நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது அவர்களை தடுக்க முயன்ற போலீசார் மீது இளைஞர்கள் கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அவர்களை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். இதானால் அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

Exit mobile version