தமிழக இளைஞரை கட்டிவைத்து துன்புறுத்திய வடமாநில இளைஞர்கள்!

ஓசூர் அடுத்த சின்னார் என்ற பகுதியில் குளிர்பதன கிடங்கு அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு நாராயணன் என்பவர் கட்டுமான பணியை மேற்கொண்டிருந்த நிலையில், கடந்த வாரம் பணி முடிந்ததும் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இதனை அறியாத நாராயணனின் அண்ணன் மகன் பிரபாகரன் என்பவர் தனது சித்தப்பாவை தேடி அப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த 5 வடமாநில தொழிலாளர்கள், ஒப்பந்த உரிமையாளர் மணி ஆகிய 7 பேர், பிரபாகரனை கொள்ளையன் என நினைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் நராயணனை தொடர்பு கொண்ட மணி, “உங்கள் அண்ணன் மகனை பணம் கொடுத்தால் தான் விடுவேன்” என்று கூறி மிரட்டியுள்ளார். இதனையெடுத்து அப்பகுதிக்கு சென்ற போலீசார், வடமாநில இளைஞர்கள் மற்றும் மணி உள்ளிட்ட 7 பேரை கைது செய்து, படுகாயம் அடைந்த பிரபாகரனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Exit mobile version