சென்னை அம்பத்தூரில் சிறுமியின் ஆபாச படம் தொடர்பான வழக்கில் இளைஞர் கைது

சென்னை அம்பத்தூரில், சிறுமியின் ஆபாச படங்களை பார்த்தது மற்றும் பகிர்ந்தது தொடர்பான வழக்கில் 24 வயது இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை அம்பத்தூரில், கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்த அரிஸ் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர், தனது இணையதள கணக்கில் இருந்து கடந்த 2018 ஆண்டு முதல்  சிறுமியின் ஆபாச படங்களை பார்த்தும், பகிர்ந்தும் வந்துள்ளார். இதனை கண்காணித்துவந்த தேசிய குற்ற ஆவண காப்பகம், அம்பத்தூர் மகளிர் காவல்நிலைய ஆய்வாளருக்கு தகவல் அளித்தது. இதனடிப்படையில் இளைஞர் அரிஸை போலீசார் கைது  செய்தனர். சிறுமியின் ஆபாச படம் பார்த்தல், பதிவிறக்கம் செய்தல், ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், அரிஸை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Exit mobile version