சென்னையில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் திருடிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்து கொள்ளையடித்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். சென்னை வளசரவாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான சாலிகிராமம் அண்ணா தெருவில் வீரமணி என்பவரது இருசக்கர வாகனம் ஒன்று திருடு போனதாக விருகம்பாக்கம் குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வளசரவாக்கம் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பல்லாவரத்தை சேர்ந்த ரோசரிகுமார் என்ற சின்னராசு இருசக்கர வாகனம் திருடியது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்தது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சின்னராசை கைது செய்த காவல்துறையினர், 379 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். சின்னராசிடம் இருந்து கொள்ளை போன இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
Discussion about this post