மூதாட்டியிடம் 5 பவுன் தங்க நகையை பறித்து சென்ற இளைஞர்கள்

மதுரையில் மூதாட்டியிடம் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்கள் பட்டபகலில் செயின் பறிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

மதுரை விளாங்குடியை சேர்ந்த மூதாட்டி நாச்சியார். இவர் தெருவில் நடந்து சென்ற போது, பதிவெண் இல்லாத இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள், அருகில் வந்து முகவரி கேட்பது போல், கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கநகையை அறுத்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.

தலைக்கவசம் அணியாமல் துணிச்சலாக நகையை பறித்து சென்ற சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து கூடல்புதூர் காவல்துறையினர் இரு இளைஞர்களையும் தேடிவருகின்றனர்.

Exit mobile version