தங்கச் செயினை பறித்து சென்ற நபரை சாதூர்யமாக பிடித்த பெண்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் பிடிப்பட்ட கொள்ளையனிடமிருந்து 50 பவுன் தங்க சங்கிலிகளை மீட்ட பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

கரட்டுபட்டியை சேர்ந்த வசந்தி என்பவர் இரவு தூங்கிக் கொண்டிருந்த போது, நீண்ட நேரமாக நாய் சத்தமிட்டபடி இருந்துள்ளது. அதனை பார்க்கச் சென்ற வசந்தியின் கழுத்தில் இருந்த சங்கிலியை தெருவில் நின்று கொண்டிருந்த இரண்டு பேர் பறித்துள்ளனர். உடனே சுதாரித்துக் கொண்ட வசந்தி, அந்த நபரை சாதூர்யமாக தாக்கி பிடித்துள்ளார். சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் பிடிப்பட்ட நபரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த நபர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த சண்முகம் என்பதும், இதேப்போன்று பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார் என்பதும் கண்டறியப்பட்டது. மேலும் அவரிடமிருந்து 50 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தனி ஆளாக திருடனை சாதூர்யமாக பிடித்த வசந்திக்கு காவல்துறையினர் மற்று பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Exit mobile version