திறமையை சரியாக பயன்படுத்தினால் அதிகம் சம்பாதிக்க முடியும்

மாணவர்கள் தங்களது திறமையை சரியாக பயன்படுத்தினால், தனியார் நிறுவனங்களில் அதிகம் சம்பாதிக்க முடியும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் தனியார் துறைக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்தார். இந்த வேலை வாய்ப்பு முகாமில் கரூர் மட்டுமின்றி, வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்தனர். இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், அர்ப்பணிப்பு உணர்வுடன் வேலை செய்தால் அரசு வேலைகளை விட தனியார் நிறுவனங்களில் அதிகம் சம்பாதிக்க முடியும் என்றார்.

Exit mobile version