பட்டாசு கடைகள் அமைக்க நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான உரிமம் பெற நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 27ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், கோவை மாநகர காவல்நிலையங்களின் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க உரிமம் பெற விண்ணப்பிக்க நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 31ஆம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள், காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்கவேண்டும். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட இடங்களை பார்வையிட்டு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்னர் அனுமதி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version