திமுக அரசை கண்டித்து நாளை மாவட்ட தலைநகரங்களில் ஊர்வலம்!

விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், ஒட்டுமொத்த அரசு ஊழியர்களும் நம்பிக்கையை இழந்து உள்ளனர். இதனையடுத்து, தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அரசு ஊழியர்களின் ஊர்வலம் நடத்த இருப்பதாக அரசு ஊழியர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதற்கும் அரசு உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றால், மார்ச் 28ஆம் தேதி தமிழக முழுவதும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டமும், பட்ஜெட் கூட்டத்தொடரின் போது கோட்டை நோக்கி முற்றுகை போராட்டமும் நடத்துவோம் என எச்சரித்துள்ளனர். இதேபோல், ஜாக்டோ ஜியோ சார்பிலும் வரும் 19ம் தேதி ஆயத்த மாநாடும், மார்ச் 5ல் உண்ணாவிரதமும், மார்ச் 24ல் 20 ஆயிரம் கிலோ மீட்டர் மனித சங்கிலி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Exit mobile version