ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி அதிமுக சார்பில் பணிமனை!

ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகில், அதிமுக சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிமனை அமைப்பதற்கான கால்கோள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு கால்கோல் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.எஸ்.தென்னரசு, சிவசுப்பிரமணி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வகுமார சின்னையன் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.

Exit mobile version