குட்டை பாவாடை அணியும் பெண்கள் பலாத்காரம் செய்ய தகுதியானவர்கள்: சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பெண்மணி

குட்டை பாவாடை அணியும் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்ய தகுதியானவர்கள் என ஒரு பெண் வாக்கு வாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டெல்லியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, குட்டைப்பாவாடை அணிந்து பெண் ஒருவர் தனது தோழிகளுடன் வந்துள்ளார். அப்போது அங்கிருந்த நடுத்தர வயதுள்ள பெண் ஒருவர் அந்த இளம் பெண் அணிந்திருந்த உடை குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், அருகில் இருந்தவர்களிடம் ஆண்கள் தங்களை பார்க்க வேண்டும் என்பதற்காகவே இப்படி உடை அணிந்து வருவதாகவும், பலாத்காரம் செய்வதற்குத் இவர்கள் தகுதியானவர்கள் என்றும் விமர்சித்துள்ளார். தொடர்ந்து அப்பெண்மணி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதையடுத்து அதிர்ச்சியடைந்த அப்பெண்கள், தரக்குறைவாக விமர்சித்த பெண், உடனடியாக மன்னிப்பு கேட்கவேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக வெளியான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Exit mobile version