மகளிர் டி20 உலகக்கோப்பையின் அரையிறுதியில் இந்தியா!

எட்டாவது மகளிர் இருபது ஓவர் உலககோப்பைப் போட்டியானது தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. தற்போது இப்போட்டிகள் அரையிறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. இதன் முதல் அரையிறுதிப் போட்டி இன்று மாலை 6.30 மணிக்கு கேப்டவுன் நகரத்தில் உள்ள நியூலேண்ட் மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்தியாவும் ஆஸ்திரேலியா அணியும் பலபரீட்சை மேற்கொள்ள உள்ளனர். லீக் போட்டிகளில், பிரிவு அ வில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளும், பிரிவு ஆ வில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளும் முதலிரண்டு இடத்தைப் பிடித்திருந்தனர். இன்றைக்கு இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மொதிகின்றன. வெல்லும் அணி இறுதிப்போட்டிக்கு செல்லும்.

Exit mobile version