News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

ஆண்கள் மட்டுமே செய்து வந்த இந்த பணியை செய்யும் புதுமைப் பெண் முருகேஸ்வரி

Web Team by Web Team
December 26, 2018
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
ஆண்கள் மட்டுமே செய்து வந்த இந்த பணியை செய்யும் புதுமைப் பெண் முருகேஸ்வரி
Share on FacebookShare on Twitter

தேனி மாவட்டம் போடியில் உள்ள மின் மயானத்தில் முருகேஸ்வரி என்ற பெண் பணிபுரிந்து வருகிறார். ஆண்கள் மட்டுமே செய்து வந்த இந்த பணியை, ஒரு பெண் செய்வது வியப்பான ஒன்று.

தேனி மாவட்டம் போடியை சேர்ந்த கருப்பையா எனும் சலவைத்தொழிலாளியின் மனைவி முருகேஸ்வரி. மதுரையில் பிறந்து வளர்ந்த இவர், சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர். தனது தாய் மற்றும் மனவளர்ச்சி குன்றிய சகோதரியுடன் வசித்து வந்த இவர், போடியில் சலவைத்தொழில் செய்து வந்த கருப்பையாவை திருமணம் செய்துகொண்டார்.

கணவருக்கு உதவியாக மின் மயானம் அமைந்துள்ள ஆற்றங்கரைப் பகுதியில் சலவைத்தொழில் செய்து வந்த நிலையில், போதிய வருவாய் இல்லாததால் பகுதிநேர வேலையாக தனது கணவரை மின் மயானத்திற்கு வெட்டியான் வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

சுடுகாட்டில் பணிபுரிந்ததால், உறவினர்கள் ஒதுக்கவே, வேறு வழி இன்றி தனது கணவர் மற்றும் இரு மகன்களுடன் சுடுகாட்டிலேயே தங்கி, கணவருக்கு உதவியாக இருந்து வந்துள்ளார் முருகேஸ்வரி.

கடந்த 2012 ஆம் ஆண்டு, இந்த சுடுகாடு மின் மயானமாக மாற்றம் பெற்றது. இந்த சூழலில், தனது கணவருக்கு கண்பார்வை கோளாறு ஏற்படவே, இவர்கள் தங்குவதற்கு, மயானப்பகுதியில் பயன்பாடின்றி கிடந்த, நாய்கள் கருத்தடை செய்ய பயன்படுத்தப்பட்ட அறை கொடுக்கப்பட்டது.

எல்லாபுறமும் சூழ்நிலைகள் முருகேஸ்வரிக்கு நெருக்கடி கொடுக்க, 2 குழந்தைகளுடன் தனது கணவரையும் சேர்த்து பராமரிக்க வேண்டிய சூழலில், மனம் தளராமல், தன் கணவர் செய்து வந்த பிணங்களை எரியூட்டும் பணியை தானே செய்ய முன்வந்தார். ஆம்… இன்று வரை சுமார் 2000க்கும் மேற்பட்ட சடலங்டகளை எரியூட்டியுள்ள முருகேஸ்வரி, தொடர்ந்து இப்பணியை செய்து வருகிறார்.

தேனி திண்ணை மனித வளமேம்பாட்டு அறக்கட்டளை சார்பில், 2018ஆம் ஆண்டிற்கான அன்னை தெரசா மனித நேயர் விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறு துன்பம் வந்தால் கூட மனம் கலங்கும் மகளிருக்கிடையே, எந்த துன்பம் வந்தாலும் எதிர் நீச்சல் போட்டு வாழவேண்டும் என்பதை உணர்த்துகிறார் இந்தப் புதுமைப் பெண் முருகேஸ்வரி.

 

Tags: funeral burningnewsjnewsjtamiltheni
Previous Post

2018 டாப்-10 படங்கள்

Next Post

டெல்லியில் பிரதமர் மோடியை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் சந்தித்ததால் தேசிய அரசியலில் பரபரப்பு

Related Posts

பிரச்சாரக் களத்திற்கே வராத காங்கிரஸ்.. சுறுசுறுப்பாக இயங்கும் அதிமுக – கிஷோர் கே சாமி!
அஇஅதிமுக

பிரச்சாரக் களத்திற்கே வராத காங்கிரஸ்.. சுறுசுறுப்பாக இயங்கும் அதிமுக – கிஷோர் கே சாமி!

February 10, 2023
செக் போஸ்டில் சேஸ் செய்த போலீஸ்!
தமிழ்நாடு

செக் போஸ்டில் சேஸ் செய்த போலீஸ்!

February 6, 2023
வழிப்பறியில் குதித்த ஆட்டோ டிரைவர். அலறிய கேரள இளைஞர்கள் !
தமிழ்நாடு

வழிப்பறியில் குதித்த ஆட்டோ டிரைவர். அலறிய கேரள இளைஞர்கள் !

February 6, 2023
பொதுமக்களின் உணர்வுகளை மதிக்கத்தெரியாத அதிகாரிகளை பனி நீக்கம் செய்யவேண்டும்!
தமிழ்நாடு

பொதுமக்களின் உணர்வுகளை மதிக்கத்தெரியாத அதிகாரிகளை பனி நீக்கம் செய்யவேண்டும்!

February 6, 2023
கழிவறையை சுத்தம் செய்ய சொல்லி மிரட்டல்!
தமிழ்நாடு

கழிவறையை சுத்தம் செய்ய சொல்லி மிரட்டல்!

February 2, 2023
முல்லைப் பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு !
தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு !

February 1, 2023
Next Post
டெல்லியில் பிரதமர் மோடியை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் சந்தித்ததால் தேசிய அரசியலில் பரபரப்பு

டெல்லியில் பிரதமர் மோடியை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் சந்தித்ததால் தேசிய அரசியலில் பரபரப்பு

Discussion about this post

அண்மை செய்திகள்

எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்பிப்பு..!

எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்பிப்பு..!

March 31, 2023
திருவள்ளூரில்.. மாணவர்கள் இடையே மோதல்.. ஒரு மாணவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.. விடியா ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை என்ன செய்கிறது?

திருவள்ளூரில்.. மாணவர்கள் இடையே மோதல்.. ஒரு மாணவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.. விடியா ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை என்ன செய்கிறது?

March 31, 2023
நரிக்குறவர் சமூத்தினரிடம் தீண்டாமை காட்டிய ரோகிணி திரையரங்கம்.. மனித உரிமை ஆணையம் விசாரணை..!

நரிக்குறவர் சமூத்தினரிடம் தீண்டாமை காட்டிய ரோகிணி திரையரங்கம்.. மனித உரிமை ஆணையம் விசாரணை..!

March 31, 2023
பற்களை உடைத்த பல்வீர்சிங்.. மனித உரிமை ஆணையத்தில் விசாரணை..!

பற்களை உடைத்த பல்வீர்சிங்.. மனித உரிமை ஆணையத்தில் விசாரணை..!

March 31, 2023
உதகை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் விவகாரம் தொடர்பாக கவனயீர்ப்புத் தீர்மானத்தினைக் கொண்டுவந்தார் எதிர்க்கட்சித் தலைவர்..!

உதகை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் விவகாரம் தொடர்பாக கவனயீர்ப்புத் தீர்மானத்தினைக் கொண்டுவந்தார் எதிர்க்கட்சித் தலைவர்..!

March 31, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version