போண்டா சாப்பிடும் போது தொண்டையில் சிக்கி உயிரிழந்த பெண்

சென்னை சூளைமேட்டில், பெண் ஒருவர் போண்டா சாப்பிடும் போது, தொண்டையில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பத்மாவதி என்ற பெண், போண்டா சாப்பிடும் போது எதிர்பாரத விதமாக போண்டா தொண்டையில் சிக்கியதால் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து, பத்மாவதியை அவரது உறவினர்கள் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது பத்மாவதியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இந்நிலையில், சம்பவம் குறித்து சூளைமேடு காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version