திருச்சியில் கள்ளக்காதல் விவகாரத்தில் நபர் ஒருவர் எரித்துக் கொலை

திருச்சியில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துறையூர் அருகே வேங்கடத்தானூர் கிராமத்தில் வெடி மருந்து ஆலையில் பணிபுரிந்து வந்த பிரபாகரன் என்பவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த சந்திரகுமார் என்பவரின் மனைவி மணிமேகலைக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இது குறித்து மணிமேகலையின் கணவர் இருவரையும் பல முறை கண்டித்தும் அவர்கள் தொடர்ந்ததால் ஆத்திரமடைந்த சந்திரசேகரன் உறங்கி கொண்டிருந்த பிரபாகரனை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்தார்.

தகவலறிந்து வந்த போலீசார் சந்திரகுமார் மற்றும் அவரது தந்தை முத்துசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version