சென்னையில் 2வது நாளாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

சென்னையில் 2வது நாளாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையின் தாம்பரம், மேடவாக்கம், கிண்டி, மெரினா கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து வருகிறது. 2 வது நாளாக தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சரிவர பெய்யாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. தொடர்மழை காரணமாக நிலத்தடி நீர் மட்டம் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Exit mobile version