சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் பரவலாக மழை பெய்தது.

கடந்த சில நாட்களாக வட மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்ததில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில், நேற்று நள்ளிரவில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருவதாலும், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதாலும் சென்னை வாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version