தமிழகத்தில் அடுத்த 5 நாட்களில் பரவலாக மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்கள் பரவலாக மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள், வட கடலோர பகுதிகள், புதுச்சேரி ஆகிய இடங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 14 ஆம் தேதி குறிப்பிட்ட சில இடங்களில் கனமழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும். சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கும் வாய்ப்பு உள்ளது.

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையாக 38 சிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்ப நிலையாக 28 டிகிரி செல்சியசாகவும் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Exit mobile version