விஜயகாந்த் சென்னை திரும்பியதும் கூட்டணி உறுதி செய்யப்படும்: எல்.கே. சுதீஷ் தகவல்

மக்களவை தேர்தல் தொடர்பாக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விஜயகாந்த் சென்னை திரும்பியதும், கூட்டணி உறுதி செய்யப்படும் என்றும் தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜயகாந்த் இன்னும் 10 நாட்களில் சென்னை திரும்ப உள்ளதாகவும், இம்மாத இறுதிக்குள் கூட்டணி உறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

Exit mobile version