அடுத்த 2 நாட்களில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்யும்: வானிலை மையம்

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வெப்பசலனம் மற்றும் வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், தேனி, கரூர், நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்யலாம் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழக உள் மாவட்டங்களில் இயல்பை விட 6 டிகிரி வரை வெப்பம் அதிகரித்துக் காணப்படும் என்றும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. 

Exit mobile version