மத்திய தெற்கு வங்ககடல் பகுதிகளில் நிலவி இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி தொடர்ந்து நகர்ந்து வருகிறது, இந்த நிலையானது அடுத்த 24மணி நேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.
இதன் காரணமாக கடலோர தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் கனமழையும் ஒர் இரு இடங்களில் கனமழை முதல் மிககனமழையும் இருக்கும்.
நாளை தமிழகத்தில் பல இடங்களில் கனமழையும்,ஒர் இரு இடங்களில் மிககனமழையும் இருக்கும்.
தென் மேற்கு வங்ககடல் பகுதிகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திற்கு காற்று வீசும் என்பதால் தென் மேற்கு வங்க கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் இன்றும் நாளையும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
Discussion about this post