காஷ்மீர் ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்க உயிரையும் கொடுப்போம்: அமித் ஷா

ஜம்மு காஷ்மீரில் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை இணைக்கும் விவகாரத்தில் உயிரையும் கொடுப்போம் என உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ள மசோதா மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று மக்களவையில் இந்த மசோதாவினை உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து இந்த மசோதா தொடர்பான விவாதம் நடைபெற்றதில், பேசிய காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஜம்மு காஷ்மீரின் ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்க மத்திய அரசு என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமித்ஷா, ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கம் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை எனவும், ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்க உயிரையும் கொடுப்போம் என்றும் ஆவேசத்துடன் கூறினார்.

 

Exit mobile version