நாடாளுமன்றத்தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற கடுமையாக உழைக்க வேண்டும் – சி.வி.சண்முகம் !

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள மயிலம் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சி,வி சண்முகம் கலந்து கொண்டு, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கழக தொண்டர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து பேசிய அவர், புரட்சித் தலைவி , எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரின் பொன்னான ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட பல திட்டங்களுக்கு விடியா திமுக அரசு முட்டுக்கட்டை போட்டுள்ளது என்று குற்றம்சாட்டினார். மேலும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெற்று தீய சக்தி திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவித்தார்.

Exit mobile version