தண்ணீர் அறிகுறிகள் உள்ள மற்றொரு நிலவு.. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டுபிடிப்பு1

சூரிய குடும்பத்திற்கு உள்ளே பூமியைத் தவிர மற்றொரு கோளின் நிலவில் நீர் இருப்பதை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி உறுதி செய்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

விண்வெளி ஆராய்ச்சியின் புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட பிரபஞ்சத்தின் பல்வேறு வியப்பூட்டும் புகைப்படங்களை நாசா வெளியிட்டு வருகிறது. பூமியின் தோற்றம் குறித்து பூமியைப் போல் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற மற்ற கோள்களைக் கண்டறியும் ஆய்வும் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சூரிய குடும்பத்தில் உள்ள சனிக் கோளில் அதன் நிலவுகளில் ஒன்றான என்செலடஸில் ((ENCELADUS)) 9,600 கிலோ மீட்டர் நீளத்திற்கு நீரூற்று இருப்பதை ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி கண்டறிந்துள்ளது. 2005ஆம் ஆண்டே சனிக்கோளின் நிலவுகளில் நீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறி வந்த நிலையில் ஜேம்ஸ் வெப் இதனை உறுதி செய்துள்ளது. இந்த நீரூற்றின் அளவை வைத்து பார்க்கும்போது ஜப்பானிலிருந்து இங்கிலாந்துக்கு செல்லும் தூரத்தை இந்த நீர் ஊற்று கொண்டிருக்கிறது. மேலும் இதில் காணப்படும் கடல் பகுதிகளில் நீர் உப்புத் தன்மையை கொண்டிருப்பதால் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகளும் உருவாகலாம் என்று தெரிவித்துள்ளன.

பூமியின் வெப்பத்தின் காரணமாக வரும் அகச்சிவப்புக் கதிர்கள் தொலைநோக்கிக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதற்காக, பூமியிலிருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் ஜேம்ஸ் வெப் நிலைநிறுத்தப்பட்டது. இந்த நிலையில், ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி விண்வெளியில் பதிவு செய்த முதல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

என்செலடஸின் மேற்பரப்பில் வெப்பநிலை மைனஸ் 200 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என்றும் அதே நேரத்தில் அதன் மையப்பகுதியில், இந்த தண்ணீரை சூடாக்கும் அளவுக்கு வெப்பம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். சனிக் கோளுக்கு 124 நிலவுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

– பாலாஜி, செய்தியாளர்

Exit mobile version