மேட்டூர் அணையில் நீரின் அளவு 3 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு !

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 13,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வந்ததால், மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு இம் மாதம் 5-ஆம் தேதி 1000 கன அடியாகக் குறைக்கப்பட்டது.

பின்னர், டெல்டா பாசனப் பகுதிகளில் மழை குறைந்ததால், பாசனத் தேவை அதிகரித்தது. இதனால் 10-ஆம் தேதி முதல் தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 13,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

Exit mobile version