ஒகேனக்கலுக்கு நீர் வரத்து வினாடிக்கு 2,300 கன அடியாக குறைவு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், மழையளவு குறைந்ததன் காரணமாக, ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து, வினாடிக்கு 2, 300 கன அடியாக குறைந்துள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஒகேனக்கலுக்கு நீர் வரத்து அதிரித்த நிலையில், சில நாட்களாக பருவமழை குறந்துள்ளதால், நீர் வரத்து படிப்படியாக குறைந்து, தற்போது 2 ,300 கன அடியாக உள்ளது.

நீர் வரத்து குறைந்த போதிலும், தடுப்பு வேலிகளின் சேதங்களை சீரமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை144வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version