டெல்டா மாவட்டங்களில் 10ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வரும் 10ஆம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டம் காணப்படும் எனவும் அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

Exit mobile version