நியூஸ் ஜெ செய்தி எதிரொலி: கடலூரில் அகற்றப்பட்ட கழிவுகள்

கடலூர் அருகே நியூஸ்ஜெ தொலைக்காட்சியின் செய்தி எதிரொலியால் கழிவுகள் துரிதமாக அகற்றப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே கோழி, மீன் போன்றவற்றின் இறைச்சிக்கழிவுகளை சிலர் கொட்டி, துர்நாற்றம் ஏற்படுத்துவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி நியூஸ்ஜெ தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில் செய்தி வெளியிட்ட ஓரிரு நாட்களிலேயே, பேரூராட்சி நிர்வாகம் கழிவுகளை அப்புறப்படுத்தி, சுத்தம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் இனி அப்பகுதியில் கழிவுகள் கொட்டபட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதிபட எச்சரிக்கை செய்தனர். இதனால் அப்பகுதி மக்கள் நியூஸ்ஜெ தொலைக்காட்சிக்கு, மனதார நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.

Exit mobile version