நவம்பர் 25-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்: தலைமைத் தேர்தல் அதிகாரி

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 25-ம் தேதி வெளியிடப்படும் எனத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வாக்காளர் சரிபார்ப்புத் திட்டத்தின்கீழ் பெயர் சேர்ப்பு, திருத்தம் ஆகிய பணிகள் இணையத்தளத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இணையத்தளத்தின் மூலம் வாக்காளர் சரிபார்ப்பை மேற்கொள்ளும் பணி நவம்பர் 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். நவம்பர் 25-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாமல் விடுபட்டவர்கள், பெயரைச் சேர்க்கவும், பட்டியலில் உள்ள விவரங்களைத் திருத்தம் செய்யவும் இணையத்தளம் மூலமே விண்ணப்பிக்கலாம் எனவும் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Exit mobile version