இந்தியாவின் மதிப்புமிக்க மனிதர்கள் பட்டியலில், விராட் கோலி முதலிடம்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி, இந்தியாவின் மதிப்புமிக்க மனிதர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர் இந்தப் பெருமையைப் பெற்றுள்ளார்.

சர்வதேச ஆலோசனை நிறுவனமான DUFF and PHELPS, இந்தியாவின் மதிப்புமிக்க மனிதர்கள் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு செய்து வெளியிட்டு வருகிறது. விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் உள்பட பலர் இந்தப் பட்டியலில் இடம் பெறுகின்றனர். வர்த்தக நிறுவனங்கள் தங்கள் பிராண்டுகளை விளம்பரம் செய்ய விளையாட்டு வீரர்கள், நடிகர்களோடு போடும் ஒப்பந்தங்களை அடிப்படையாகக் கொண்டு, DUFF and PHELPS நிறுவனம் இந்தப் பட்டியலை வெளியிடுகிறது.

அந்த அடிப்படையில், விராட் கோலியின் மதிப்பு, 2018-வது ஆண்டு மதிப்பை விட, 2019-ல் 39 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தப் பட்டியலில் அக்சய் குமார் இரண்டாவது இடத்தையும், பாலிவுட் ஜோடியான ரன்வீர்-தீபிகா ஜோடி மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி 9-வது இடத்தையும், சச்சின் டெண்டுல்கர் 15-வது இடத்தையும் பிடித்துள்ளனர். ரோகித் சர்மாவுக்கு 20-வது இடம் கிடைத்துள்ளது.

Exit mobile version