சாலை நடுவே 4 புலிகள் நடந்து சென்ற வைரல் காட்சி..

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் சாலை நடுவே நான்கு புலிகள் நடந்து செல்லும் காணொலிக் காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

கோவை மதுக்கரை பகுதியில், அவ்வப்போது பொதுமக்கள் குடியிருப்புப் பகுதிக்கு யானைகள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில், வனப்பகுதியில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, நான்கு புலிகள் அந்த சாலையின் நடுவே மெதுவாக நடந்து சென்ற காட்சியை, அவர்கள் பதிவு செய்தனர். அதில் புலி ஒன்று சாலையின் நடுவில் அமர்ந்து கொண்டிருந்த காட்சியை வனத்துறை அதிகாரிகள் சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இது தற்போது வைரலாக பரவிவருகிறது. மதுக்கரை வனப்பகுதியில் புலிகள் இருப்பது தற்போது தெரிய வந்துள்ளதை அடுத்து, புலிகளை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version