பெண் காவலரை வீடியோ எடுத்து டிக்டாக் செய்து வெளியிட்ட இளைஞர்

பெண் போலீஸை போனில் வீடியோ எடுத்து டிக் டாக் செய்த 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியில் இம்மாதம் 16 ம் தேதி ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு சமயபுரம் காவல்நிலையத்தை சேர்ந்த பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணி முடித்து விட்டு அப்பகுதியில் நடந்து சென்ற பெண் காவலரை ஒரு இளைஞர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் வீடியோவை தனது செல்போன் மூலம் டிக்டாக் செய்து வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவலர் அளித்த புகாரின் பேரில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பெரியார் நகரை சேர்ந்த சுபாஷ் கண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Exit mobile version