வேலூர் மக்களவை தேர்தல்: முதலமைச்சர் பழனிசாமி நாளை பிரசாரம்

வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் பிரசாரத்தை முதலமைச்சர் பழனிசாமி, நாளை துவக்குகிறார்.

வேலூர் மக்களவை தேர்தல் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வரும் 27-ந் தேதி அன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை துவக்குகிறார். 27 ஆம் தேதியன்று மாலை வாணியம்பாடி மற்றும் ஆம்பூரில் பிரசாரத்தை துவக்கும் அவர், மறுநாள், கீழ்வைத்தியணான் குப்பம் மற்றும் குடியாத்தத்தில் வாக்கு சேகரிக்கிறார். ஆகஸ்ட் 2-ந் தேதி அணைக்கட்டு மற்றும் வேலூரில் முதலமைச்சர் பிரசாரம் மேற்கொள்கிறார்.

அதிமுக கூட்டணி சார்பில், வேலூர் மக்களவைத் தொகுதியில் ஏ.சி.சண்முகம் களம் காண்கிறார். அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க ஏற்கனவே அமைச்சர்களும், கூட்டணிக் கட்சியினரும் களமிறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version