பிரிட்ஜில் வைத்த பிரியாணியை சாப்பிட்ட குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் பிரிட்ஜில் வைத்த பிரியாணியை சாப்பிட்ட குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

அரக்கோணத்தை அடுத்த தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன், தன்னுடைய உறவினரின் ஈமச் சடங்கில் பங்கேற்பதற்காக மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்றுள்ளார். ஈமச் சடங்கில் மிஞ்சிய பிரியாணியை எடுத்து வந்து வீட்டு பிரிட்ஜில் வைத்த அவர், மறுநாள் காலை அதே பிரியாணியை மீண்டும் சூடு செய்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்துள்ளார்.

பிரியாணியைச் சாப்பிட்ட குழந்தைகளுக்கு சிறிது நேரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தைகளை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே கோபிகா என்ற குழந்தை உயிரிழந்தது. மேலும் மூன்று குழந்தைகளுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Exit mobile version