விலைவாசி ஏறிப்போச்சு! திமுக கப் சிப்! – அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வைக் கண்டித்து அதிமுகவினர் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே விடியா திமுக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆர்ப்பட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்னையன் மாவட்ட கழக செயலாளர்கள் பாலகங்கா, ஆதிராஜாராம், வெங்கடேஷ் பாபு, விருகை ரவி, ஆர் எஸ் ராஜேஷ், எம் கே அசோக், கேபி கந்தன், கழக அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று உள்ளனர்.

மேலும் திமுக அரசை கண்டிக்கும் விதமாக அதிமுகவினர் காய்கறி மாலை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது விலைவாசி உயர்வுக்கான போராட்டம் மட்டுமல்ல, தமிழகத்தில் கடந்த பத்து நாட்களில் இருபத்து மூன்று கொலைகள் நடந்தேறியிருக்கின்றன.  இதனால் சட்ட ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு இருக்கிறது. அதனை கண்டிக்கும் விதமாகவும் இந்த கண்டன ஆர்ப்பாட்டமானது காலை ஒன்பதரை மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Exit mobile version