வீட்டிற்குள் வந்தவுடனே ஷெரினை அழ வைத்த வனிதா..

இன்று பிக்பாஸ் வீட்டில் 101 வது.தர்ஷன் வெளியேற்றப்பட்டதற்கு பிறகு லாஸ்லியா, சாண்டி, முகென், ஷெரின் மட்டுமே வீட்டில் உள்ளனர்.நேற்று போட்டியாளர்களை உற்சாக படுத்த சூப்பர் சிங்கர் போட்டியாளர்கள் வீட்டிற்கு வந்தனர்.அதில் முகெனின் சொந்த பாடல் ஒன்றை பாட வைத்து அனைவரும் ரசித்தனர்.பின்பு மீரா, மோகன் வைத்யா, ரேஷ்மா, பாத்திமா பாபு ஆகியோரை பிக்பாஸ் வெளியேற சொல்லிவிட்டார்.

இன்றைய பிக்பாஸ் விட்டில் வனிதா, கஸ்தூரி, சேரன் , சாக்‌ஷி ஆகியோர் வீட்டிற்குள் வருகின்றனர்.அனைவரும் ஒன்றாக அமர்ந்து தங்களின் கருத்துகளை பகிர்ந்துகொண்டிருக்கையில், வனிதாவோ ‘நீ தர்ஷனோட பழகுனத வச்சு, நான் அந்த word- அ சொன்னப்ப மக்களுக்கு நான் போனப்ப புரியல, 2 வாரம் கழிச்சி புரிஞ்சிருக்கு அதான் அவன் வெளியே போயிட்டான் என கூற, சாக்‌ஷியோ நீங்க ஏன் அத decide பண்றிங்க என கேட்க, ஷெரின் அழுதுக்கொண்டே நான் தான் காரணம் என கூறுகிறார்.

அதன் பின் போட்டியாளர்களை மேடையில் அமர வைத்து சில பார்வையாளர்கள் கேள்வி கேட்கின்றனர்.இன்றைய பிக்பாஸ் வீடு மீண்டும் சோகத்தில் மூழ்க தொடங்கியுள்ளது.

Exit mobile version