ஷெரினுக்காக தர்ஷன் என்ன செய்தார் தெரியுமா ?

ஜூன் 23ம் தேதி தொடங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் உள்ளே வந்தனர்.நாட்கள் குறைய குறைய பிக்பாஸ் வீட்டில் பிரச்சனைகளும், போட்டிகளும் எழுந்தது.இன்று சவால்களை தாண்டி லாஸ்லியா, முகென், தர்ஷன், சாண்டி, ஷெரின், கவின் என 6 பேர் மட்டுமே உள்ளனர்..இவர்களில் மூன்று பேர் மட்டுமே இறுதியாக பிக்பாஸ் வீட்டில் இருப்பார்கள்.

அந்த மூன்று பேரில் ஒருவராக வரவேண்டும் என்பதற்காக பிக்பாஸில் அனைவரும் போட்டிப்போட்டு கொண்டு விளையாடுகின்றனர்..நேற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து சேரன் வெளியேற்றப்பட்டார்.தற்போது 92 நாட்கள் கடந்து பல கடுமையான டாஸ்கினை போட்டியாளர்கள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்றைய பிக்பாஸ் வீட்டில் தர்ஷனிடம் நீங்கள் யாரை காப்பாற்ற வேண்டும் என பிக்பாஸ் கேட்கிறார்.அதற்கு தர்ஷனோ, ஷெரினை யாரும் காப்பாற்ற மாட்டாங்க , அதனால நான் ஷெரினை காப்பாத்துறேன் என சொல்லி விட்டு, பச்சைமிளகாய்யை எடுத்து சாப்பிடுகிறார்.இன்னொருவரையும் நீங்கள் காப்பாற்றலாம் என பிக்பாஸ் கூற, மற்றொரு பச்சை மிளகாய்யை சாப்பிட்டு சாண்டியை காப்பாற்றுகிறார்.இன்றைய பிக்பாஸ் வீடு சற்று சுவாரஸ்யமாகவே காட்சியளிக்கிறது.

Exit mobile version