News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

தமிழறிஞர் வையாபுரிப் பிள்ளையின் 130-வது பிறந்த நாள்

Web Team by Web Team
October 12, 2021
in TopNews, கட்டுரைகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
தமிழறிஞர் வையாபுரிப் பிள்ளையின் 130-வது பிறந்த நாள்
Share on FacebookShare on Twitter

தமிழ் ஆராய்ச்சி மற்றும் பதிப்புத்துறையில் தனி இடம் பிடித்த தமிழறிஞர் வையாபுரிப் பிள்ளையின் 130-வது பிறந்த நாள் இன்று…

யார் அந்த வையாபுரிப்பிள்ளை? விவரிக்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு

 

இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற தமிழ் அறிஞரான வையாபுரிப்பிள்ளை, நெல்லை மாவட்டம் சிக்கநரசய்யன்பேட்டையில் தோன்றினார்.

இளம் வயதிலிருந்தே வாசிப்பில் நாட்டமுள்ள வையாபுரிப்பிள்ளை, சென்னை மாகாணத்திலேயே தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்று, ‘சேதுபதி தங்கப் பதக்கம்’ பெற்று புகழடைந்தார்.

வழக்குரைஞராக வாழ்வைத் தொடக்கிய இவர், ஆராய்ச்சிகளில் தமக்கிருந்த விருப்பத்தினால் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டார்.

பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் பேராசிரியராக பணிக்குச் சேர்ந்தார்.

சென்னை பல்கலைக்கழகம் உருவாக்கிய தமிழ்க் கலைக்களஞ்சியத்தைப் பதிப்பித்தார்.

திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்தில் இவர் தமிழ்த்துறை தலைவராக இருந்த காலம், இன்றும் பொற்காலமாகவே கருதப்படுகிறது.

வையாபுரிப்பிள்ளை தமிழ் மட்டுமின்றி சமஸ்கிருதம், மலையாளம், பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார்.

பதிப்புத்துறையில் புதுமை செய்ய விரும்பிய அவர், சிறந்த பதிப்புக்கான விதிமுறைகளை வகுத்தார்.

சொற்களைப் பிரிக்க சில ஒழுங்கு முறைகளைக் கட்டமைத்தார்.

உவேசாவுக்குப் பின், பழந்தமிழ் இலக்கியங்களைத் தேடித் தேடி பதிப்பித்த பெருமை வையாபுரிப்பிள்ளையே சாரும்.

கம்பன் கவிநடையில் கரைந்துபோன வையாபுரிப்பிள்ளை, தமது நண்பர் ரசிகமணி டிகேசியுடன் இணைந்து நெல்லைக் கம்பன் கழகத்தை நிறுவினார்.

‘தமிழ் இலக்கிய சரிதத்தில் காவிய காலம்’, ‘இலக்கிய உதயம்’, ‘திராவிட மொழிகளில் ஆராய்ச்சி’, ‘தமிழர் பண்பாடு – கம்பன் காவியம்’, உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ள இவர், 38-க்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்துள்ளார்.

ஆராய்ச்சிகளின் ஆர்வலராகவும், நூற்பதிப்பின் நூதனராகவும் விளங்கிய வையாபுரிப்பிள்ளை, காலமும் கனித்தமிழும் உள்ள வரையில் ஆய்வுகளின்மூலம் வாழ்ந்திருப்பார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

நியூஸ் ஜெ செய்திகளுக்காக விவேக்பாரதி

Tags: lawyernewsjTamil lexiconvaiyapuri pillai
Previous Post

சோபியான் மாவட்டத்தில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

Next Post

திருமலை பிரம்மோற்சவம் : ஏழுமலையானின் கருடசேவை

Related Posts

நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!
அரசியல்

நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!

January 27, 2023
rajpath road to karthavya road
இந்தியா

காலனித்துவத்தை குறிக்கும் வகையிலுள்ள ’ராஜ்பாத் சாலை’ பெயர், ’கர்த்தவ்யா சாலை’ என மாற்றம்!

September 6, 2022
’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!
அரசியல்

’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

September 5, 2022
Dead woman lying on the floor under white cloth with focus on hand
இந்தியா

ஆண் நண்பர்களுடன் பேசியதால் 5-ஆம் வகுப்பு மாணவி கொலை! பெற்றோர் அறங்கேற்றிய கொடுஞ்செயல்!

September 5, 2022
rishi sunak liz trous
அரசியல்

இங்கிலாந்தின் பிரதமர் பதவிக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு! அடுத்த பிரதமர் யார்?

September 5, 2022
edappadi k palanisamy
அரசியல்

வ.உ.சி.யின் 151-வது பிறந்தநாளையொட்டி இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்தம் படத்திற்கு மலர்தூவி மரியாதை!

September 5, 2022
Next Post
திருமலை பிரம்மோற்சவம் : ஏழுமலையானின் கருடசேவை

திருமலை பிரம்மோற்சவம் : ஏழுமலையானின் கருடசேவை

Discussion about this post

அண்மை செய்திகள்

ஆளுங்கட்சியினர் ஆராஜகம் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு!

ஆளுங்கட்சியினர் ஆராஜகம் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு!

January 31, 2023
ஜி20 மாநாடு என்றால் என்ன?

ஜி20 மாநாடு என்றால் என்ன?

January 31, 2023
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் !

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் !

January 31, 2023
லட்சத்தீவு நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ரத்து!

லட்சத்தீவு நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ரத்து!

January 31, 2023
பொங்கல் பரிசு தொகை! அரசின் கஜானாவுக்கே திரும்பி சென்றுள்ளது.

பொங்கல் பரிசு தொகை! அரசின் கஜானாவுக்கே திரும்பி சென்றுள்ளது.

January 31, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version