ஆதாரத்துடன் சிக்குகிறார் வைரமுத்து !

சின்னத்திரை தொகுப்பாளினி ஒருவரிடம் பாடலாசிரியர் வைரமுத்து பாலியல் சீண்டல் மேற்கொண்டதற்கு தாம் சாட்சி என்று பிரபல பாடகர் மலேசியா வாசுதேவனின் மருமகள் ஹேமா மாலினி என்பவர் தெரிவித்துள்ளார்.

மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன். அவரது மனைவி ஹேமா மாலினி. இவர் தற்போது சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இவர் தமது முகநூல் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தன் கண்ணெதிரே பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியிடம் பாடலாசிரியர் வைரமுத்து தவறான முறையில் நடந்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த சம்பவத்திற்கு தாமே சாட்சி என்றும் அவர் கூறியுள்ளார். வைரமுத்து பற்றி ஏற்கனவே தாம் கூறிய குற்றச்சாட்டுக்கள் கண்டுகொள்ளப்படாமல் போய்விட்டதாகவும் தற்போது சின்மயி புகாரால் உண்மைகள் வெளிவரத் துவங்கியுள்ளதாகவும் ஹேமாமாலினி கூறியுள்ளார்.

ஏற்கனவே வைரமுத்து மீது சின்மயி மற்றும் சிங்கப்பூர் – மலேசியாவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் புகார் கூறியிருந்தனர். தற்போது வைரமுத்துவின் தவறான செய்கைகளுக்கு சாட்சியாக தாமே உள்ளதாக ஹேமா மாலினி கூறியிருப்பது அவருக்கு சிக்கலை அதிகப்படுத்தி உள்ளது.

Exit mobile version